திருவள்ளூர்

திமுக செயற்குழுக் கூட்டம்

DIN

திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கவரைப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன் தலைமை வகித்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் வரவேற்றார். நிர்வாகிகள் சந்திரன், சத்தியராஜ், டாக்டர் பரிமளம், நெசவாளர் அணி நிர்வாகி நாகலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் பா.செ.குணசேகரன், அபிராமி, வழக்குரைஞர் அணி அமைப்பாளர் தேவேந்திரன், தகவல் தொடர்பு தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திமுக மாநில தீர்மான குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர் , முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் பங்கேற்ற திமுக  மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் எம்எல்ஏ கோ.வி.செழியன், எம்எல்ஏ வசந்தம் கார்த்திக் ஆகியோர் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் பற்றிப் பேசினர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் மு.மணிபாலன், மேற்கு  ஒன்றிய துணைச் செயலாளர் திருமலை, மாவட்டப் பிரதிநிதி கே.வி.ஆனந்தகுமார், பொறியாளர் அணி நிர்வாகி கோகுல்நாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT