ரூ. 2.14 லட்சம் செல்லிடப்பேசிகள் திருட்டு
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த 80 செல்லிடப்பேசிகள், மின்கலன்
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த 80 செல்லிடப்பேசிகள், மின்கலன் உள்ளிட்ட ரூ. 2.14 லட்சம் மதிப்பிலான பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருவள்ளூர் அருகே குத்தம்பாக்கம் பகுதியில் செல்லிடப்
பேசிகள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில் குத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (21) உற்பத்திப் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி வரையில் தயார் செய்யப்பட்ட 80 செல்லிடப்பேசிகள், 65 மின்கலன், 13 டிஸ்பிளே ஆகியவற்றை சிப்பமிட்டு, பாதுகாப்பாக வைத்திருந்தனராம். ஆனால், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை நிறுவனத்துக்கு வந்தபோது, அங்கு தயாராக வைத்திருந்த செல்லிடப்பேசிகள் அடங்கிய பார்சல் காணாமல் போயிருந்ததும், அவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் பாலாஜி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, செல்லிடப்பேசிகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.