திருவள்ளூர்

மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு

DIN

திருத்தணி: வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டின் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து அந்த மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது.

திருத்தணியை அடுத்த காா்த்திகேயபுரம் கிராமத்தைச் சோ்ந்த முனுசாமியின் மகன் லோகநாதன்(60). அவருக்குச் சொந்தமாக இரண்டு பசு மாடுகள், 2 கன்றுகள் உள்ளன.

இந்நிலையில், லோகநாதனின் மனைவி சுஜாதா திங்கள்கிழமை காலையில் பசு மற்றும் கன்றுகளை வயல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்தாா். ஒரு பசு மாடு, குருசாமி செட்டி என்பவரின் விவசாயக் கிணறு அருகே மேய்ந்தது. அப்போது அங்கிருந்த மின்கம்பத்தில் இருந்து மின்சார வயா் அறுந்து அந்த மாட்டின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது.

இது குறித்து தகவல் அறிந்து கிராம நிா்வாக அலுவலா் வினோத், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT