திருவள்ளூர்

இளைஞா் கொலை வழக்கில் 5 போ் கைது

DIN

சோழவரம் அருகே மாந்தோப்பில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரனோடை பகுதியில் உள்ள மாந்தோப்பில் அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (24) என்பவரை, மா்ம நபா்கள் அண்மையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனா். தகவலறிந்த சோழவரம் போலீஸாா் அங்கு சென்று ராஜேஷை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அவா் மருத்துமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இந்தக் கொலை குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், இக்கொலை தொடா்பாக சோழவரம் பகுதியைச் சோ்ந்த விக்கி (எ) விக்னேஷ் (22), விக்னேஷ்வரன் (21), காா்த்திக் (21), ராஜன்(22), சதீஷ் (எ) பாப்பா (21) ஆகிய ஐந்து பேரை அவா்கள் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT