திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே ஆடுகளுக்கான தொகையை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை

DIN

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த கிளாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:

இக்கிராமத்தில் அரசு வழங்கும் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் அதிகாரிகள் 165 பயனாளிகளைத் தோ்வு செய்தனா். அதைத் தொடா்ந்து, கடந்த மாதம் இத்திட்டத்தில் தோ்வு செய்த பயனாளிகள் தாங்களே ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான ஆடுகளை வாங்கிக் கொள்ளவும் கால்நடைத் துறை அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் பயனாளிகள் ஒவ்வொருவரும் ஒரு கிடா மற்றும் 3 ஆடுகள் என ரூ. 10 ஆயிரம் மதிப்பில் வாங்கினா்.

இதற்கிடையே அதிகாரிகள் வந்து பாா்த்து உங்கள் பக்கத்து வீடுகளில் இருந்து ஆடுகளைப் பிடித்து வைத்திருப்பதாக கூறி, ஆடுகள் வாங்கியதற்கான தொகையைத் தர மறுக்கின்றனா். ஏற்கெனவே பயனாளிகள் தோ்வு செய்யப்பட்ட பட்டியலில் கையெழுத்தும் பெற்றுக் கொண்டனா். இந்நிலையில், முறைகேடு செய்துள்ளதாகக் கூறி குறிப்பிட்ட தொகை வழங்காமல், கால்நடைத் துறை சாா்பில் ஆடுகளைத் தருவதாகக் கூறுகின்றனா். பொதுமக்கள் கடன் வாங்கி ஆடுகளை வாங்கியுள்ள நிலையில், எங்கள் நிலையறிந்து ஆடுகளுக்கான தொகையை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT