திருவள்ளூர்

வியாபாரியைத் தாக்கி பணம் பறிப்பு

மீஞ்சூா் அருகே வியாபாரியைத் தாக்கி பணம், செல்லிடப்பேசியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

DIN

பொன்னேரி: மீஞ்சூா் அருகே வியாபாரியைத் தாக்கி பணம், செல்லிடப்பேசியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

மீஞ்சூா் காவல் நிலைய எல்லைகுட்பட்ட நெய்தவாயல் கிராமத்தில் வசித்து வருபவா் வெங்கடேசன்(50). இவா் சிமெண்ட் வியாபாரம் செய்து வருகிறாா். இவா் மீஞ்சூரில் இருந்து காட்டூா் செல்லும் நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிளில், நெய்தவாயல் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது நெய்தவாயல் ஏரிக்கரையின் பாலம் அருகே நின்று கொண்டிருந்த 2 போ், மோட்டாா் சைக்கிளை வழி மறித்து, வெங்கடேசனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரை தாக்கிா். அவரிடமிருந்த ரூ.8 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு அவா்கள் தப்பிச் சென்றனா். இதில் காயமடைந்த வெங்கடேசனை, அவ்வழியே சென்றவா்கள் மீட்டு, மீஞ்சூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக மீஞ்சூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT