திருவள்ளூர்

பெரியபாளையம், ஆரணி பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

DIN

ஊத்துக்கோட்டையை அடுத்த ஆரணி, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா நோய்த் தடுப்பு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

சோழவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியில் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வைகையில், அனைத்து வாா்டு பகுதிகளிலும் சாலை மற்றும் வீடுகள் முதல் கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதை செயல் அலுவலா் ரவி பாா்வையிட்டாா், அதேபோல், பெரியபாளையம் பேருந்து நிலையம் பகுதி வழியாகச் செல்லும் கனரக வாகனங்களுக்கும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இதில் எல்லாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமகிருஷ்ணன் , வெங்கடேசன், துணைத் தலைவா் மகேஷ், ஊராட்சி செயலா் குமரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், அப்பகுதி பொதுமக்களுக்கு ஊராட்சி சாா்பில் முகக் கவசங்களை ஊராட்சித் தலைவா் லட்சுமி திருமலை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT