திருவள்ளூர்

கரானோ தொற்று பாதித்த பூந்தமல்லி வேட்பாளா் வாக்களிப்பு

DIN

கரோனா தொற்றால் பாதித்த பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி முழு கவச பாதுகாப்பு ஆடையுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தாா்.

பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி போட்டியிடுகிறாா். இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தாா். கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா்கள் வாக்களிக்க தோ்தல் ஆணையம் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், திருநின்றவூரில் உள்ள தனியாா் பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு மாலையில் திமுக வேட்பாளா் ஆ.கிருஷ்ணசாமி முழு கவச ஆடையுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தாா்.

இதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட நேரத்தில் கரோனா நோய் தொற்று பாதித்தோா் முழு பாதுகாப்புடன் வந்து தங்களது வாக்குகளை பதிந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT