திருவள்ளூர்

வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி தொடங்கியதை அடுத்து ஆட்சியா் பா.பொன்னையா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கை பெருமாள்பட்டு தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

முன்னதாக திருவள்ளூா், திருத்தணி தொகுதிகளுக்கான மையங்களுக்கு ஆட்சியா் பா.பொன்னையா நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையங்களையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT