திருவள்ளூர்

ஆவடி மாநகராட்சிப் பகுதிகளில் உயர் கோபுர மின்விளக்குகள்: அமைச்சர் நாசர் இயக்கி வைத்தார்

DIN

ஆவடி மாநகராட்சிப் பகுதியில் ரூ.24.50 லட்சம் செலவில் 7 இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகளை பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இயக்கி வைத்தார்.
 ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 41-ஆவது வார்டு புதிய ராணுவ சாலை - வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு சாலை சந்திப்பு, 44-ஆவது வார்டில் உள்ள பெரியார் நகர் மருத்துவமனை வளாகம், பெரியார் நகர் தகன மேடை, 38-ஆவது தேவி நகர் கழிவு நீரேற்று நிலைய வளாகம், தேவி நகர் முஸ்லிம் மயான வளாகம், 18-ஆவது வார்டு பாபு நகர் அண்ணா சாலை, பாபு நகர் மின் மயானம் ஆகிய 7 இடங்களில் ரூ. 24.50 லட்சம் செலவில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இதனை அமைச்சர் சா.மு.நாசர் இயக்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை கொண்டு வந்தார். பின்னர், அந்தப் பகுதி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் கூறிய பிரச்னைகளை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் மூலம் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.
 நிகழ்வில் ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆணையர் தர்பகராஜ், மண்டலக் குழு தலைவர்கள் ஜி.ராஜேந்திரன், ஜோதிலட்சுமி நாராயண பிரசாத், வி.அம்மு, பொறியாளர் மனோகரன், சத்தியசீலன், திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஜெ.ரமேஷ், கு.சேகர், பகுதிச் செயலாளர் பொன்.விஜயன், மாநகராட்சி உறுப்பினர்கள் சாந்தி, சுமதி, மேகலா, சுகன்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT