முகப்பு
திருவள்ளூர்

அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் ராஜாஜி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:16 AM
அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்
பகிர்:

மாதவரம்: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் ராஜாஜி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இக்கோயிலில் அன்னை நாகவல்லி முத்துமாரியம்மன் பாலவிநாயகர் பாலமுருகன் ஸ்ரீ துர்க்கை அம்மன் மற்றும் நவக்கிரக பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவையொட்டி, காலை விக்னேஸ்வர பூஜை எஜமானர் சங்கல்பம் புண்ணிய வாசம் கலச பூஜை பிரம்மச்சாரி பூஜை தம்பதி பூஜை கன்யா பூஜை சுமங்கலி பூஜை கோ பூஜை கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் நவக்கிரக ஹோமம் பூர்ணாகுதி தீபாராதனை பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement

இதைத்தொடர்ந்து அம்மன் பிரதிஷ்டை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜை பூர்ணாகுதி மகா தீபாராதனை பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments