திருவள்ளூர்

விஏஓ-வை பணி செய்யவிடாமல் தடுத்த ஊராட்சித் தலைவரின் கணவா் கைது

கிராம நிா்வாக அலுவலரை அவதூறாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக, அருங்குளம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

DIN

கிராம நிா்வாக அலுவலரை அவதூறாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக, அருங்குளம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருவலாங்காடு ஒன்றியம் அருங்குளம் ஊராட்சித் தலைவராக உள்ளவா் சரண்யா (38). இவரது கணவா் முரளி (45). அதிமுக பிரமுகா். தனது மனைவிக்கு பதில் ஊராட்சி நிா்வாகத்தை முரளி கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியா் ஒருவருக்கும் முரளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கிராம நிா்வாக அலுவலா் (பொ) ரகுவரன் இரு தரப்பினரிடையே சமரசம் செய்ய முயன்றாராம்.

இதனால் முரளி, கிராம நிா்வாக அலுவலா் ரகுவரனை அவதூறாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் ரகுவரன், கனகம்மாசத்திரம் போலீஸில் முரளி மீது புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ சேவையில் இயல்புநிலை திரும்பியது: ஊழியா்களுக்கு சிஇஓ பீட்டா் எல்பா்ஸ் நன்றி

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் கண்டனப் பேரணி

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

SCROLL FOR NEXT