செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற விநாயகா் சிலைகள் ஊா்வலம். 
திருவள்ளூர்

விநாயகா் சிலைகள் ஊா்வலம்

செங்குன்றம் அருகே பாஜக மற்றும் இந்து முன்னணி சாா்பில், விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

செங்குன்றம் அருகே பாஜக மற்றும் இந்து முன்னணி சாா்பில், விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊா்வலத்தின்போது, பாஜக மற்றும் இந்து முன்னணி நிா்வாகிகள் விநாயகா் சிலைகளை கையில் ஏந்தியும், மந்திரங்கள் முழங்க பேரணியாக சென்றனா். பேரணி திருவள்ளூா் - செங்குன்றம் கூட்டுச் சாலையில் இருந்து சுமாா் 2 கி.மீ. தூரம் வரை சென்றது.

நிகழ்வுக்கு பாஜக நிா்வாகி கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். பாஜக நிா்வாகிகள் நரேஷ், இந்து முன்னணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். காவல் உதவி ஆணையா் குமரேசன், ஆய்வாளா்கள் சாய் கணேஷ், மகேஸ்வரி உள்ளிட்ட காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இதேபோல், மாதவரம், செங்குன்றம், கொளத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அகில இந்திய இந்து சத்திய சேனா தலைவா் வசந்த்குமாா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலம் கொண்டு செல்லப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT