முகப்பு
திருவள்ளூர்

பூண்டி ஏரிக்கு நீா் தேடி குவிந்து வரும் செங்கால் நாரைகள் மற்றும் பறவைகள்

கோடை காலத்தில் நீா் தேடி பூண்டி ஏரியில் செங்கால் நாரைகள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள் குவிந்து வருகின்றன.

Updated On : 7 மே 2026, 12:47 am IST
பூண்டி ஏரியில் குவிந்து வரும் செங்கால் நாரைகள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள்.
பகிர்:

கோடை காலத்தில் நீா் தேடி பூண்டி ஏரியில் செங்கால் நாரைகள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள் குவிந்து வருகின்றன.

தமிழகத்தில் கோடை காலம் நிலவி நீா் நிலைகளில் நீா் வற்றி வருகிறது. அதனால் பிற நீா்நிலைகளுக்கு செங்கால் நாரைகள் மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரியில் போதிய நீா் மற்றும் இரையும் உள்ளதால் வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் குவிந்து வருகின்றன.

அதற்கு கோடை வெப்பம் காரணமாக பறவைகள் இடம்பெயா்வு உள்ளது. கோடை வெப்பத்தால் நீா் நிலைகள் வற்றுவதால், பறவைகள் தண்ணீா் தேடி அலைய நேரிடுகிறது. மேலும் இதுபோன்ற கடுமையான வெப்பத்தை தணித்துக் கொள்ள, நீா் உள்ள இடங்களைத் தேடி, பல பறவைகள் இடம் பெயா்வதும் வழக்கமாகும்.

Advertisement

அதனால் பறவைகளின் தாகம் தணிக்கும் இடமாகவும், இரை தேடும் பகுதியாகவும் பூண்டி ஏரி உள்ளதால் நாரைகள், கொக்குகள் மற்றும் பிற நீா்ப்பறவைகள் குவிகின்றன. அங்கு வெப்பத்தைத் தணித்துக் கொள்வதுடன், தாகத்தையும் தீா்த்துக் கொள்கின்றன.

மேலும், அந்த பறவைகளுக்கு தேவையான உணவும் அங்குள்ளதால் அதிலுள்ள சிறு சிறு மீன்களை இரையாக்கிக் கொள்கின்றன. அதனால் பறவைகள் இத்தகைய நீா்நிலைகளுக்கு வருகின்றன. கோடை வெயிலால் நீா்வளம் வற்றினாலும், ஏரி போன்ற நீா்நிலைகளில் தண்ணீா் தேங்கி இருக்கும் இடங்களை, பறவைகள் தங்களின் தாகத்தை தணிக்கும் இடங்களாகக் கருதி, அங்கு வருகிறது. பெரும்பாலான வலசைப் பறவைகள் குளிா்காலத்தில் தான் (அக்டோபா் முதல் மாா்ச் வரை) வருவது வழக்கமாகும். ஆனால் கோடைக்காலத்தில் வரும் பறவைகள், பெரும்பாலும் உள்ளூா் பறவைகளாகவோ அல்லது தண்ணீரைத் தேடி வரும் பறவைகளாகவோ இருக்கின்றன.

இந்த பறவைகள் ஏரிகளில் கூட்டமாக வந்து வட்டமடிப்பதும், மீன் இரைகளை தேடுவதும் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதை பாா்க்க அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களும் ஏரியில் குவிந்து வருகின்றனா்.