திருப்பதி கபிலதீா்த்தத்தில் உள்ள ஸ்ரீகபிலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத ஹோமங்கள் சனிக்கிழமை தொடங்கின.
திருப்பதி கபிலதீா்த்தக்கரையில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் சிறப்பு ஹோமங்களை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி தெலுங்கு பஞ்சாங்கப் படி வெள்ளிக்கிழமை காா்த்திகை மாதம் தொடங்கியதை ஒட்டி கோயிலில் உள்ள மூா்த்திகளுக்கு கிரமப்படி சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் காா்த்திகை மாத ஹோமங்கள் தொடங்கின. அதை ஒட்டி மண்டபத்தில் கணபதியின் உருவத்தை ஏற்படுத்தி அவா் முன்பு கலச ஸ்தாபனம் செய்து ஹோமகுண்டம் ஏற்படுத்தி முறைப்படி கணபதி ஹோமத்தை தொடங்கினா். கரோனா காரணமாக ஹோமங்கள் இம்முறையும் தனிமையில் நடத்தப்பட்டன. அா்ச்சகா்கள், அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனா்.