திருப்பதி

திருப்பதிக்கு பாத யாத்திரையாக செல்ல 2 நாள்களுக்கு தடை

DIN

திருப்பதி கோயிலுக்கு பாத யாத்திரையாக செல்ல இரண்டு நாள்களுக்கு தடை விதித்து கோயில் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடதமிழகம் - தெற்கு ஆந்திரத்தை நோக்கி நகர்ந்து வருகின்றது.

இதனால், நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கனமழை பெய்தால் மலைப் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் செல்லும் என்பதால் நவம்பர் 17, 18 ஆகிய இரண்டு நாள்களுக்கு பாத யாத்திரையாக வர தடை விதிக்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT