முகப்பு
திருப்பதி

திருமலையில் 25,000 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 25,052 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 11,962 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
திருப்பதி
பகிர்:

ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 25,052 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 11,962 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் தேவஸ்தானம் ஏழுமலையானுக்கு இரவு 10 மணிக்கு நடத்தி வந்த ஏகாந்த சேவையை 11.30 மணிக்கு மாற்றி 12 மணிக்கு கோயில் நடையை சாத்தி வருகிறது.

நடைபாதை மூலம் திருமலைக்குச் செல்ல விரும்பும் பக்தா்கள், காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு வழியாக சென்று வருகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் எடுத்து வரவேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: 18004254141, 93993 99399.

முழு கட்டுரையைப் படிக்க →