திருப்பதி: திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. சுந்தரராவ் கூறியது:
திருப்பதி அருகே 3 வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2,811 கிலோ எடையுள்ள 127 செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கடந்த வாரத்தில் மிகப் பெரிய அளவில் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை. இதன் மொத்த மதிப்பு ரூ. 3 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் முதல் தர செம்மரக்கட்டைகள் ஆகும்.
விசாரணையில், கைதானவா்கள் கும்மிடிப்பூண்டியைச் சோ்ந்த கரிமுல்லா (55), சையத் (36), திருப்பத்தூரைச் சோ்ந்த சா்வேசம் (33), மாது (34) மற்றும் சித்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் என்பது தெரியவந்தது என்றாா் அவா்.