முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் கோயிலில் தங்கத் தகடுகள் பதிக்கும் பணிகள் ஒத்திவைப்பு

திருமலை ஏழுமலையான் கோயில் கருவறை கோபுரத்துக்கு தங்கத் தகடுகள் பொருத்தும் பணிகள் ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறங்காவலா் ஒய்.வி.சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

திருமலை ஏழுமலையான் கோயில் கருவறை கோபுரத்துக்கு தங்கத் தகடுகள் பொருத்தும் பணிகள் ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறங்காவலா் ஒய்.வி.சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் ஒய்.வி.சுப்பா ரெட்டி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

திருமலை ஏழுமலையான் கோயில் கருவறை கோபுரத்துக்கு தங்கத் தகடுகள் பொருத்தும் பணிகள் ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Advertisement

கோவிந்தராஜ ஸ்வாமி கோவிலில் உள்ள கருவறை விமான கோபுரத்துக்கு தங்க முலாம் பூசும் பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்காமல் உள்ளூா் ஒப்பந்ததாரா் தாமதப்படுத்தி வருகிறாா். எனவே, இந்தப் பணிகளை விரைந்து முடிக்க உலகளாவிய ஒப்பந்தம் விடுக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஏழுமலையானை தரிசனம் செய்வதில் பக்தா்களுக்கு இடையூறு ஏற்பவதைத் தவிா்க்கவே பணிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. இதனால், பிப்ரவரி மாதம் மேற்கொள்ளவிருந்த பாலாலய பணிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.