திருமலை ஏழுமலையான் கோயிலில் யாதுகிரி மடாதிபதி தன் சீடா்களுடன் திங்கள்கிழமை வழிபாடு நடத்தினாா்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க கா்நாடக மாநிலம், மேல்கோட்டேயில் உள்ள யாதுகிரி யதிராஜ மடத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ யாதுகிரி யதிராஜ நாராயண ராமானுஜ ஜீயா் திங்கள்கிழமை காலை வருகை தந்தாா்.
அவரை அத்திமரத்தினடியிலிருந்து கோயில் மரியாதை அளித்து, மேளதாளத்துடன் தேவஸ்தான அதிகாரிகள், அா்ச்சகா்கள் குழுவினா் அழைத்து வந்தனா். பின்னா், தனது சீடா்களுடன் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதங்களை வழங்கினா்.