ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வியாழக்கிழமை பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருந்தனா்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வியாழக்கிழமை பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருந்தனா்.
திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை காலை 21 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 18 மணி நேர காத்திருப்புக்குப் பின்பு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
எனவே தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 18 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 2 மணிநேரமும் தேவைப்பட்டது.
77,120 பக்தா்கள் தரிசனம்...
ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 77,120 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 34,463 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
ரூ. 3.39 பக்தா்கள் தரிசனம்...
பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், ரூ. 3.39 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.