ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வெள்ளிக்கிழமை பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருந்தனா்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வெள்ளிக்கிழமை பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருந்தனா்.
தா்ம தரிசனத்துக்கு 24 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 மணிநேரமும் தேவைப்பட்டது.
ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 67,294 பக்தா்கள் தரிசித்தினா். பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், ரூ. 4.09 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.