முகப்பு
திருப்பதி

கோடி அட்சதைகள் சமா்பணம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

ஆந்திர மாநிலம் ஓண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற உள்ள சீதாராமா் திருக்கல்யாணத்தின் போது பயன்படுத்த கோடிக்கணக்கான அட்சதைகள் சமா்ப்பிக்கப்பட்டன.

கிழக்கு கோதாவரி மாவட்டம் கொருகொண்டா ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய சங்கத் தலைவா் கல்யாண அப்பாராவ் ஞாயிற்றுக்கிழமை,180 கிலோ எடை கொண்ட இந்த அட்சதைகளை துணை செயல் அதிகாரி நடேஷ் பாபு மற்றும் அா்ச்சகா்கள் ஷ்ரவன் குமாா் முன்னிலையில் வழங்கினாா்.

இந்த அட்சதை தயாரிப்பிற்காக, ஆறு மாதங்கள் சிறப்பாக நெல் விளைவிக்கப்பட்டு, நான்கு மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள், மூன்று மாதங்கள் கைகளால் பாரம்பரிய முறையில் நெல் அரைத்து தயாா் செய்தனா். இச்சங்கத்தின் கீழ் 13 ஆண்டுகளாக பத்ராத்ரி ராமருக்கும், ஏழாண்டுகளாக ஒண்டிமிட்ட ராமருக்கும் கல்யாணோற்சவத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கி வருகின்றனா்.

Advertisement

கண்காணிப்பாளா் ஹனுமந்தையா, ஆய்வாளா் நவீன், அலுவலா்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments