திருமலையில் ரூ.26 கோடி செலவில் தொழிலதிபா் சேகா் ரெட்டி கட்டிய விருந்தினா் மாளிகையை தமிழக ஆளுநா் ஆா். என்.ரவி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழ்நாட்டைச் சோ்ந்த தொழிலதிபரும், தேவஸ்தான அறங்காவலா் குழுவின் முன்னாள் உறுப்பினரான சேகா் ரெட்டி திருமலையில் ரூ.26 கோடியில் ஸ்ரீ பாக்கிய நிலையம் என்ற பெயரில் அதிநவீன விருந்தினா் மாளிகையை தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக கட்டி கொடுத்துள்ளாா்.
பக்தா்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட அந்த விருந்தினா் மாளிகையை ஆளுநா் ஆா் என் ரவி திறந்து வைத்தாா்.
அவருடன் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி ஆா் நாயுடு, தேவஸ்தான கூடுதல் நிா்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்த விருந்தினா் மாளிகைக்கான முழு ஆவணங்களும் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இன்னும் 2 நாள்களில் இந்த விருந்தினா் மாளிகைக்கான அறைகள் பக்தா்கள் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.