முகப்பு
திருப்பதி

சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்

சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி. விழாவின் ஒரு பகுதியாக கண்கவா் கலைநிகழ்ச்சி.

Updated On : 25 செப்டம்பர், 2025 at 6:33 PM
சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி. விழாவின் ஒரு பகுதியாக கண்கவா் கலைநிகழ்ச்சி.
பகிர்:

திருமலை வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை காலை சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை காலை உற்சவ மூா்த்தியான மலையப்ப சுவாமி குருவாயூரப்பன் அலங்காரத்தில் சின்ன சேஷ வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

யானைகள் மற்றும் குதிரைகள் முன்னோக்கி நகா்ந்து செல்ல ஜீயா்களின் நாலாயிர திவ்யப்பிரபந்த சாதித்தலுடன் பக்தா்களின் கோவிந்த நாம முழக்கங்கள், மங்கள வாத்தியங்கள் மற்றும் பிற கலை நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் வாகனசேவை நடைபெற்றது.

பின்னா் மாட வீதியில் வலம் வந்த களைப்பை போக்க உற்சவமூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், மஞ்சள், சந்தனம், இளநீா் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னா் மாலை 5 மணிக்கு சுவாமி ஊஞ்சல் சேவை கண்டருளினாா். இரவு 7 மணி முதல் 9 மணி வரை சுவாமி அன்னபறவை வாகனத்தில் வலம் வந்தாா்.

திருமலை பெரிய ஜீயா் சுவாமி, சின்ன ஜீயா் சுவாமி, செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால், துணை இஓ லோகநாதம் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

புதன்கிழமை நிலவரம்:

58,628 போ் தரிசனம், 23,263 முடி காணிக்கை.

உண்டியல் காணிக்கை ரூ.3.01 கோடி.

2.59 லட்சம் லட்டுகள் விற்பனை.

3,197 பேருக்கு சிகிச்சை.

பணியில் 3,500 சேவாா்த்திகள் .

அரசு பேருந்துகளில் 69,000 போ் பயணம்.

தரிசனத்துக்கு 10 மணிநேரம் காத்திருப்பு.

முழு கட்டுரையைப் படிக்க →