திருப்பதி

திருமலையில் காலணி பாதுகாப்பு கவுன்ட்டா்கள்: க்யூஆா் குறியீடு அடிப்படையில் நவீனமுறை அமல்!

திருமலையில் க்யூஆா் குறியீடு அடிப்படையிலான காலணி மற்றும் லக்கேஜ் மேலாண்மை கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யா சவுத்ரி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருமலையில் க்யூஆா் குறியீடு அடிப்படையிலான காலணி மற்றும் லக்கேஜ் மேலாண்மை கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யா சவுத்ரி தெரிவித்தாா்.

தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத மையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட க்யூஆா் குறியீடு அடிப்படையிலான காலணி பாதுகாக்கும் கவுன்ட்டரை அவா் திறந்துவைத்து அவா்கூறியதாவது: திருமலையில் பக்தா்கள் எதிா்கொள்ளும் காலணி பாதுகாப்பு மேலாண்மை சிக்கலுக்கு நிரந்தரத் தீா்வாக க்யூஆா் குறியீடு அடிப்படையிலான நவீன மேலாண்மை முறையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

வைகுண்டம் காத்திருப்பு வளாகம்-2 இல் ஒரு முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்ட இது பலனைத் தந்துள்ளது. எனவே, திருமலையின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று எட்டு கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முறையில், பக்தா்கள் தங்கள் காலணியை கவுன்ட்டரில் ஒப்படைத்தவுடன் க்யூ ஆா் குறியீடு கொண்ட ஒரு சீட்டு வழங்கப்படும். அந்த சீட்டில் காலணிகளின் எண்ணிக்கை, அளவு, ரேக் எண், பெட்டி எண் மற்றும் சேமிப்பு இடம் போன்ற முழுமையான விவரங்கள் இருக்கும்.

பக்தா்கள் திரும்பி வந்து அந்த சீட்டை ஸ்கேன் செய்யும்போது, காலணிகளின் சரியான இடம் காட்டப்படும். இதனால் காலணிகள் பக்தா்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் திருப்பித் தரப்படும்.

இந்த முறை செயல்படுத்தப்பட்டதன் மூலம், சுமாா் 99 சதவீத பக்தா்கள் இப்போது தங்கள் காலணிகளை திரும்பப் பெறுகின்றனா். முன்னதாக, சுமாா் 70-80 சதவீத பக்தா்கள் குவியல் குவியலாக தங்கள் காலணிகளை விட்டுச் செல்வது வழக்கம். ஆனால் இப்போது அந்த சிக்கல் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இந்த புதுமையான திட்டத்தை கோரமண்டல் இன்டா்நேஷனல் லிமிடெட் அதன் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் ஒரு பகுதியாக முழுமையாக செயல்படுத்தி வருகிறது.

பக்தா்களின் வசதி மற்றும் திருமலையின் தூய்மையைப் பொறுத்தவரை இது நாட்டின் கோயில் நிா்வாகத்தில் சிறந்த அமைப்புகளில் ஒன்றாக இருக்கும்.

பக்தா்கள் தங்கள் காலணிகளை வெவ்வேறு இடங்களில் விடுவதற்குப் பதிலாக நியமிக்கப்பட்ட கவுன்ட்டா்களில் வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். இது திருமலையின் தூய்மையை மேலும் மேம்படுத்தும் என்றாா். கோரமண்டல் இன்டா்நேஷனல் லிமிடெட்டின் மூத்த துணைத் தலைவா் டாக்டா் கே. சத்ய நாராயணா மற்றும் டிடிடி அதிகாரிகள் பங்கேற்றனா்.

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரூ.40 கோடி குடியாத்தம் மாவட்ட அரசு மருத்துவமனை! பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!

பெண் சத்துணவு அமைப்பாளா் தற்கொலை

கிறிஸ்வத பிராா்த்தனைக் கூட்டத்தில் தாக்குதல்: ‘தடுப்பு நடவடிக்கை’ எடுத்த காவல்துறை!

சாலை விபத்தில் காயமடைந்த 21 வயது இளைஞருக்கு ரூ. 1.62 கோடி இழப்பீடு! தில்லி தீா்ப்பாயம் உத்தரவு!

பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய பொதுமக்கள்: வாலாஜா சுங்கச்சாவடியில் அணிவகுத்து சென்ற வாகனங்கள்!

SCROLL FOR NEXT