திருவண்ணாமலை

இளைஞர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

DIN

வந்தவாசி அருகே கைப்பந்து விளையாடிய இளைஞரை தாக்கியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்
ஜெகதீசன் (21). இவர், அந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எதிரில் உள்ள மைதானத்தில் தனது நண்பர்களுடன் வெள்ளிக்கிழமை கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (40), ஏன் இங்கு கைப்பந்து விளையாடுகிறீர்கள் என்று கேட்டு ஜெகதீசனை தாக்கினாராம். இதில் காயமடைந்த ஜெகதீசன், வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸார், கோகுலகிருஷ்ணனை சனிக்
கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT