திருவண்ணாமலை

அம்பேத்கர் பதாகை கிழிப்பை கண்டித்து சாலை மறியல் 

தினமணி

செய்யாறை அடுத்த மாங்கால் கூட்டுச்சாலை பகுதியில் அம்பேத்கர் பதாகை கிழிக்கப்பட்டதைக் கண்டித்து, தலித் அமைப்பினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
 அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, இந்திய குடியரசுக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை சார்பில் மாங்கால் கூட்டுச்சாலைப் பகுதியில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பதாகைகளில் இருந்த அம்பேத்கர் படத்தை மட்டும் மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனையறிந்த கட்சி நிர்வாகிகள், தலித் அமைப்பினர் அந்தப் பகுதியில் திரண்டு சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
 தகவலறிந்து வந்த தூசி போலீஸார் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். மேலும், பதாகைகளை கிழித்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT