திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோயிலில் டிச.18-இல் பரமபத வாசல் திறப்பு

DIN


திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 18-ஆம் தேதி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் மாணிக்கவாசகர் உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை மாணிக்கவாசகர் உத்ஸவம் தொடங்கியது. இதையொட்டி, அலங்கார ரூபத்தில் மாணிக்கவாசகர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 23-ஆம் தேதி வரை இந்த உத்ஸவம் நடைபெறுகிறது.
மாணிக்கவாசகர் உத்ஸவம் நடைபெறும் நாள்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், இரவு நடராஜருக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். அப்போது, கோயிலில் திருவெம்பாவை பாடல்கள் பாடப்படும்.
மார்கழி மாதப் பிறப்பு: இந்த நிலையில், மார்கழி மாதப் பிறப்பையொட்டி, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 16) முதல் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
வைகுண்ட ஏகாதசியையொட்டி, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 18) அருணாசலேஸ்வரர் கோயிலில் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் ஸ்ரீவேணுகோபால சுவாமி, ஸ்ரீகஜலட்சுமி அம்மனுக்கு அபிஷேகமும், பின்னர் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT