போளூரில் உள்ள ஸ்ரீசங்கர வேத பாடசாலையில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மஹோத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, காலையில் சூர்ய நமஸ்காரம், பஞ்சாயதன நித்ய பூஜை, அனுக்ஞை, குருவந்தனம், விக்னேஸ்வர பூஜை, மஹாசங்கல்பம், கலச ஸ்தாபன பூஜை, சண்டி யாகம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிற்பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
தொடர்ந்து, மாலை வரை நாமசங்கீர்த்தனம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீசங்கர வேத பாடசாலை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.