திருவண்ணாமலை

தட்டச்சு, கணினிப் பயிலக சங்க முதல் பொதுக்குழுக் கூட்டம்

DIN

திருவண்ணாமலை மாவட்ட, திருவண்ணாமலை மைய தட்டச்சு, கணினிப் பயிலக சங்கத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்க நிர்வாகி விஜயா தலைமை வகித்தார். கூட்டத்தில், சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக கீழ்பென்னாத்தூர் விஜயகுமார், செயலராக நாகராஜன், பொருளாளராக மேல்மலையனூர் கோகுலகிருஷ்ணன், துணைத் தலைவராக சுதாகர், துணைச் செயலராக சுரேஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதேபோல, திருவண்ணாமலை மைய தலைவியாக செங்கம் விஜயா, செயலராக ரமேஷ், பொருளாளராக ராமச்சந்திரன், துணைத் தலைவராக ஜோதிலிங்கம், துணைச் செயலராக கங்கா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கூட்டத்தில், மாவட்ட சங்கத்தைப் பதிவு செய்வது, வங்கிக் கணக்கு தொடங்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க செயல்பாடுகள் குறித்து கவிஞர் நல்ல.பன்னீர்செல்வம் பேசினார். கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் ரமேஷ், சத்தீயசீலன், சுரேஷ்குமார், சுகன்யா, சரஸ்வதி, கணேஷ், முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT