திருவண்ணாமலை

விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவிகளுக்குப் பரிசு

DIN

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வந்தவாசியை அடுத்த வல்லம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
வந்தவாசியை அடுத்த முனுகப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் பங்கேற்ற வல்லம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் கோ - கோ, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் முதலிடம் பெற்றனர்.
இதையடுத்து, வல்லம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வடவணக்கம்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நந்தினிதேவி பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியர் என்.சுந்தரேசன், உதவித் தலைமை ஆசிரியர்கள் எஸ்.வெற்றிவேல், வி.ரவிச்சந்திரன், உடல் கல்வி ஆசிரியர்கள் ஆர்.குமரன், எஸ்.அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT