திருவண்ணாமலை

பெண் கொலை வழக்கில் தொழிலாளி கைது

DIN

செங்கம் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளியை போலீஸார் திங்கள்கிழமை கைது  செய்தனர்.
செங்கத்தை அடுத்த புதூர் செங்கம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக புதுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், அந்தப் பெண் புதுப்பாளையம் ஒன்றியம், கொ.புதுப்பட்டு கண்ணன் மகள் கங்கா (30) என்பது தெரிய வந்தது. மேலும், விழுப்புரம் மாவட்டம், எஸ்.வி.நகரைச் சேர்ந்த குமரவேலுவுக்கும் (35), கங்காவுக்கும் தொடர்பிருந்ததும், இருவரும் கடந்த 3-ஆம் தேதி இரவு புதூர் செங்கம் பகுதியில் சந்தித்த போது ஏற்பட்ட தகராறில், கங்காவை குமரவேல் கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, குமரவேலை புதுப்பாளையம் போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT