திருவண்ணாமலை

பைக் மீது டிராக்டர் மோதல்: விவசாயி சாவு

DIN

வந்தவாசி அருகே பைக் மீது டிராக்டர் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
வந்தவாசியை அடுத்த தெய்யாறு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தாமரை (65). இவர், வியாழக்கிழமை மாலை பைக்கில் தெய்யாறிலிருந்து வந்தவாசிக்கு சென்று கொண்டிருந்தார். வந்தவாசி - தெய்யாறு சாலையில் அத்திப்பாக்கம் கிராமம் அருகே சென்றபோது, செந்தாமரையின் பைக் மீது பின்னால் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த செந்தாமரை சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT