திருவண்ணாமலை

பெரணமல்லூர் ஒன்றியத்தில் சத்துணவுப் பணியாளர்களுக்கு சுகாதாரப் பெட்டகம்

பெரணமல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சுமார் 80 சத்துணவுப் பணியாளர்களுக்கு சுகாதாரப் பெட்டகங்களை பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சனிக்கிழமை வழங்கினார்.

DIN


பெரணமல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சுமார் 80 சத்துணவுப் பணியாளர்களுக்கு சுகாதாரப் பெட்டகங்களை பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சனிக்கிழமை வழங்கினார்.
பெரணமல்லூர் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கீழ், சுமார் 97 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளர்களுக்கு சுகாதாரப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சத்துணவு மேலாளர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். 
அலுவலக மேலாளர் சீனுவாசன் வரவேற்றார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு, ஒன்றிய அளவில் சுமார் 80 சத்துணவு மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சுகாதாரப் பெட்டகங்களை வழங்கிப் பேசுகையில், 
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளை வரிசையில் நிற்க வைக்காமல், கீழே அமர வைத்து உணவு பரிமாற வேண்டும் என்றார்.
இந்த சுகாதாரப் பெட்டகத்தில், பணியாளர்கள் சத்துணவு மையங்களுக்குச் செல்லும் முன்பு தங்களது கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கான கிருமி நாசினி சோப்பு, நகங்களை வெட்ட நகவெட்டி, தலைமுடி கீழே உதிராமல் இருக்க தொப்பி, பாதுகாப்பு உடை, துண்டு உள்ளிட்ட பொருள்கள் அடங்கியிருந்தன.
நிகழ்ச்சியில் சத்துணவுப் பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT