திருவண்ணாமலை

மணல் கடத்தல்: 3 பேர் கைது

செய்யாறு அருகே ஆற்று மணல் கடத்தியதாக 2 டிராக்டர், 3 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், 3 பேரை கைதும் செய்தனர்.

DIN

செய்யாறு அருகே ஆற்று மணல் கடத்தியதாக 2 டிராக்டர், 3 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், 3 பேரை கைதும் செய்தனர்.
 செய்யாறை அடுத்த காழியூர் கிராமப் பகுதியில் செய்யாறு போலீஸார் புதன்கிழமை தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து அந்த வழியாக உரிய அனுமதியில்லாமல் ஆற்று மணலை ஏற்றி வந்த 2 டிராக்டர்கள், 3 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், மாட்டு வண்டிகளில் வந்த காழியூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் (25), உதயகுமார் (30), வெங்கடேசன் (25) ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநர்கள் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT