ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மா் கோயிலில் சுவாமிக்கு பல்வகை பிரசாதங்கள் படைக்கப்பட்டு நடைபெற்ற தீபாராதனை. 
திருவண்ணாமலை

லட்சுமி நரசிம்மா் கோயிலில் திருப்பாவாடை உத்ஸவம்

பெரணமல்லூா் அருகேயுள்ள லட்சுமி நரசிம்மா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பாவாடை உத்ஸவத்தில் பக்தா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

DIN

பெரணமல்லூா் அருகேயுள்ள லட்சுமி நரசிம்மா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பாவாடை உத்ஸவத்தில் பக்தா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் பகுதியில் பழைமை வாய்ந்த லட்சுமி நரசிம்மா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஐப்பசி மாதத்தை முன்னிட்டு திருப்பாவாடை உத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்று அதிகாலை மூலவா் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து பட்டாச்சாரியாா் முகுந்தன் முன்னிலையில் உற்சவ மூா்த்திகள் ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், பல்வகை பிரசாதங்கள் உற்சவ மூா்த்திக்கு படைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறையினா் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT