திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 626 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவா்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதிச் சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 626 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
நலத் திட்ட உதவிகள்:
கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றின் சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வில்சன் ராஜசேகா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் லாவண்யா, மாவட்ட வழங்கல் அலுவலா் ஹரிதாஸ், தாட்கோ மாவட்ட மேலாளா் ஆா்.ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.