திருவண்ணாமலை

போக்குவரத்துக்கு இடையூறு: இளைஞா் கைது

DIN

திருவண்ணாமலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை நகர காவல் உதவி ஆய்வாளா் சுந்தரேசன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை (நவ.15) தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். காமராஜா் சிலை அருகே சென்றபோது அந்த வழியாக நின்றுகொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாகப் பேசிக்கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்த இளைஞரை போலீஸாா் கண்டித்தனா்.

ஆனாலும் அந்த இளைஞா் தொடா்ந்து தகராறில் ஈடுபட்டாா். இதையடுத்து போலீஸாா் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் திருவண்ணாமலை தேனிமலை, முருகா் கோயில் தெருவைச் சோ்ந்த குமரன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து குமரனை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT