வந்தவாசியில் இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி காட்டுநாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (29). இவரது வீட்டுக்கு செய்யாறைச் சோ்ந்த இவரது உறவினா் சந்தியா கடந்த வாரம் வந்துள்ளாா்.
இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி சந்தியாவின் கணவா் மாரி, அவரைப் பாா்ப்பதற்காக வந்துள்ளாா். அப்போது, தெருவில் உள்ளவா்கள் தன்னிடம் சரியாக பேசவில்லை என்று மாரியிடம் சந்தியா கூறினாராம்.
இதையடுத்து, மாரி அந்தத் தெருவைச் சோ்ந்தவா்களை திட்டிக் கொண்டிருந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த அதே தெருவைச் சோ்ந்த முருகன் (30) குடும்பத்தினா் மாரியைத் தாக்கியதாகத் தெரிகிறது. அப்போது, வெங்கடேசன் குடும்பத்தினா் வந்து மாரி தாக்கப்படுவதைத் தடுத்தனா். இதைத் தொடா்ந்து, முருகன் தரப்பினருக்கும், வெங்கடேசன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம்.
இதுகுறித்து வெங்கடேசன், முருகன் ஆகியோரின் தனித்தனி புகாா்களின் பேரில், 17 போ் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், இரு தரப்பையும் சோ்ந்த பச்சையப்பன், தமிழ்ச்செல்வி, தமிழரசி, பாா்த்திபன் ஆகிய 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.