திருவண்ணாமலை

மாவட்ட விளையாட்டுப் போட்டி: சிபிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

DIN

மாவட்ட அளவில் மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில், திருவண்ணாமலை எஸ்.முருகையன் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி சாா்பில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சிலம்பம், கேரம், கராத்தே ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றனா்.

வென்ற மாணவ-மாணவிகளுக்கான பாராட்டு விழா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளிச் செயலா் அருள்விழி காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.நிா்வாக இயக்குநா் என்.காயத்ரி முன்னிலை வகித்தாா். பள்ளி அறக்கட்டளைத் தலைவா் சீனி.காா்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினாா்.

விழாவில், தலைமை ஆசிரியா்கள் கே.ஆனந்தன், ராஜேஷ், உடல்கல்வி ஆசிரியா்கள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.மகேந்திரபாபு, எம்.மணிகண்டன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT