திருவண்ணாமலை

சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகள் இயக்கிவைப்பு

வந்தவாசி அருகே ரூ.1.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுடன் கூடிய 2 சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகள் இயக்கி வைக்கப்பட்டது.

DIN

வந்தவாசி அருகே ரூ.1.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுடன் கூடிய 2 சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகள் இயக்கி வைக்கப்பட்டது.
வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி, தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தெய்யார் மடம் ஊராட்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மொத்தம் ரூ.1.50 லட்சம் செலவில் ஆழ்துளைக் கிணறுடன் கூடிய 2 சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டன.
இந்த சிறு மின்விசை நீர்த்தேக்கத் தொட்டிகளை தொகுதி  எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் செவ்வாய்க்கிழமை இயக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அந்தப்பகுதி பொதுமக்கள் அந்தத் தொட்டிகளிலிருந்து தண்ணீர் பிடித்துச் சென்றனர்.தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் டி.பரணிதரன்,  திமுக மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன், ஒன்றியச் செயலர்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், பொறியாளர் பிரிவு ஒன்றியச் செயலர் எஸ்.பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT