திருவண்ணாமலை

கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

DIN


போளூர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில், கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
பிரசாரத்துக்கு வட்டாரத் தலைவர் த.தஞ்சி தலைமை வகித்தார். நிர்வாகிகள் சங்கர், பழனி, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஜாக்டோ - ஜியோ நிதிக் காப்பாளர் ச.மோசஸ் கலந்துகொண்டார்.
அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது. மூடிய அரசுப் பள்ளியை திறக்க வேண்டும். தமிழ் வழிக் கல்வி பள்ளிகளை காக்க வேண்டும். அரசாணைகள் 100, 101, 145, 164 ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில், மாநிலச் செயலர் சி.ஜி.பிரசன்னா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ச.டேவிட்ராசன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT