திருவண்ணாமலை

முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

DIN

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாத அமாவாசை பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அன்று காலை மூலவர் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
தொடர்ந்து பித்ரு தோஷ நிவாரண பாராயண பூஜை நடைபெற்றது.    பின்னர், மாலை உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அம்மன் பத்மாவதி தாயார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். 
இதைத் தொடர்ந்து அம்மன் வீதியுலா, ஊஞ்சல் தாலாட்டு ஆகியவை நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.   
 கோயில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.லட்சுமண சுவாமிகள், வந்தவாசி மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பூஜையில் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT