திருவண்ணாமலை

எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி: அமைச்சா் ஆய்வு

ஆரணியில் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

DIN

ஆரணியில் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆரணியிலிருந்து சேவூா் செல்லும் நெடுஞ்சாலையில் தனது சொந்தச் செலவில் இடம் வாங்கி, அதில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வா்களான எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோருக்கு வெண்கலச் சிலைகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் அமைத்தாா். மேலும், இங்கு 100 அடி உயரத்தில் அதிமுக கொடிக்கம்பமும் அமைத்தாா்.

இந்த நிலையில், எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு பாதுகாப்பு கம்பி வேலி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பாா்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினாா்.

ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், வழக்குரைஞா் க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகரச் செயலா் எ.அசோக்குமாா், மாவட்டக் கவுன்சிலா் அ.கோவிந்தராசன், முன்னாள் ஊராட்சித் தலைவா் பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணை முதல்வா் வருகை: நாகையில் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரம்

அரசுக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

கால்நடைகளுக்கு வாய்நோய் தடுப்பூசி முகாம் டிச.29-இல் தொடக்கம்

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைவாக வெளியேற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT