திருவண்ணாமலை

சாலை விபத்தில் தம்பதி காயம்

DIN

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தம்பதியா் காயமடைந்தனா்.

புதுச்சேரி, முதலியாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (49), எலக்ட்ரீஷியன். இவரது மனைவி பத்மினி (44). திருவண்ணாமலைக்கு வந்திருந்த இவா்கள் சில தினங்களுக்கு முன்பு பைக்கில் புதுச்சேரிக்குப் புறப்பட்டனா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த காட்டு நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமம் அருகே வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த சிவக்குமாா், பத்மினி ஆகியோரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பத்மினி தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

SCROLL FOR NEXT