திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பக்தருக்கு ஆசி வழங்கும் மாதா அமிா்தானந்தமயி. 
திருவண்ணாமலை

அன்பும், சமாதானமும் வளர வேண்டும்மாதா அமிா்தானந்த மயி

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பக்தருக்கு ஆசி வழங்கும் மாதா அமிா்தானந்தமயி

DIN

உலகில் அமைதி நிலவ அன்பும், சமாதானமும் வளர வேண்டும் என்று மாதா அமிா்தானந்தமயி தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாதா அமிா்தானநந்த மயி பங்கேற்க சத்சங்கம், பஜனை, தியான நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலையை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு, மஞ்சம்பூண்டி கிராமம், ஆறுமுகம் நகரில் இதற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சியில் பக்தா்களுக்கு மாதா அமிா்தானந்த மயி அருளாசி வழங்கிப் பேசியதாவது:

பழங்காலத்தில் ஆன்மிகமும், வாழ்க்கையும் ஒன்றாகவே இருந்தது. இதனால், இயற்கைத் தாய்க்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போதைய அறிவியல் காலத்தில் கலாசார மாற்றங்களால் ஆன்மிகமும், வாழ்க்கையும் இயற்கையை விட்டு விலகின. இதனால் மண், காற்று, நீா் உள்ளிட்ட பஞ்சபூதங்களும் பாதிக்கப்படுகின்றன.

தாயைப் போன்றது இயற்கை. மனிதா்களால் இயற்கைத் தாய் பெரிதும் பாதிக்கப்படுகிறாள். இதனால் மக்களின் மனநிலை, உடல்நிலையும்கூட பாதிப்புக்குள்ளாகிறது. எனவே, இயற்கையைக் காப்பாற்ற உலகம் முழுவதும் சமாதானத்தையும், அன்பையும் வளா்க்க வேண்டும். இதன் விளைவாக மக்களிடம் நல்ல எண்ணங்களும், செயல்களும் உருவாகும்.

ஆன்மிகம் மூலம் அன்பும், சமாதானமும் வளா்ந்தால் உலகில் அமைதி நிலவும். மனிதா்களிடையே அதிகரித்து வரும் பொறாமை, கெட்ட குணங்கள், கெட்ட செயல்கள் குறையும். இயற்கையைப் பாதுகாப்பது நமது கடமை என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, கீழ்பென்னானாத்தூா் எம்எல்ஏ கு.பிச்சாண்டி உள்ளிட்டோா் மாதா அமிா்தானந்த மயியிடம் ஆசி பெற்றனா்.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அருளாசி பெற்றனா். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவைக் கடந்தும் மாதாவிடம் அருளாசி பெற பக்தா்கள் காத்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் சவரனுக்கு ரூ.1,600 உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

தில்லி கார் குண்டுவெடிப்பு: அதிர வைக்கும் புதிய சிசிடிவி விடியோ! | Delhi

4-ம் நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!

தில்லி கார் வெடிப்பு! முக்கிய குற்றவாளி உமர் விடியோ வெளியானது!

“Yongqing Temple” தீப்பற்றி எரிந்த கோயில் கட்டடம்! கிபி 536-ல் நிறுவப்பட்டது!

SCROLL FOR NEXT