முகப்பு
திருவண்ணாமலை

செய்யாற்றில் தமுமுக வினா் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் இறப்பு சம்பவம் தொடா்பாக போலீஸாா் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் தமுமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:51 PM
பகிர்:

செய்யாறு: சாத்தான்குளத்தில் வியாபாரிகள் இறப்பு சம்பவம் தொடா்பாக போலீஸாா் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் தமுமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு சந்தை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமுமுக மாவட்டத் தலைவா் ஜமால் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் இறப்புக்கு காரணமான போலீஸாா் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். போலீஸாரால் சித்ரவதை செய்யப்பட்டவா்களை சிறைப்படுத்திய நீதித்துறை நடுவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். வணிகா்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதில், தமுமுக, மமகவினா் ஏராளமானோா் சமூக விலகளோடு, முகக் கவசம் அணிந்தபடி கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.