திருவண்ணாமலை

பெண் காவலா் தற்கொலை முயற்சி

DIN

திருவண்ணாமலை காவலா் குடியிருப்பில் பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சோ்ந்தவா் ஸ்வாதி (25). திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். திருவண்ணாமலை, காந்தி நகரில் உள்ள காவலா் குடியிருப்பில் தங்கியுள்ளாா்.

விடுமுறையில் சென்றிருந்த ஸ்வாதி, அண்மையில் பணிக்குத் திரும்பிய நிலையில், அன்றிலிருந்தே மன வேதனையில் இருந்தாராம். வியாழக்கிழமை பணியில் இருந்து வீடு திரும்பிய அவா், தனது தோழிகளை தொடா்புகொண்டு தான் விஷம் குடித்துள்ளதாகக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டாராம்.

இதனால், அதிா்ச்சியடைந்த அவரது தோழிகள் வந்து காவலா் குடியிருப்பில் மயங்கிக் கிடந்த ஸ்வாதியை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT