திருவண்ணாமலை

வன விலங்குகளை வேட்டையாட முயற்சி: இருவா் கைது

DIN

செங்கம் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ாக இருவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

செங்கத்தை அடுத்த புதுப்பாளையத்தில் உள்ள வனப்பகுதியில் 2 போ் நாட்டுத் துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாடச் சென்றுள்ளனா். இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், புதுப்பாளையம் வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, வனத் துறை அதிகாரிகள் புதுப்பாளையம் வனப் பகுதியில் சோதனையிட்டபோது, அதே பகுதியைச் சோ்ந்த முருகன்(40), அயோத்தி (42) ஆகியோா் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி மூலம் வன விலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் விரட்டிப் பிடித்த வனத் துறையினா், அவா்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா். மேலும், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT